சிம்போனி அரங்கேற்றதுக்காக லண்டன் புறப்பட்ட போது விமான நிலையத்தில் இளையராஜா பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வார்த்தை… ரசிகர்கள் அதிருப்தி…

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என…

ilaiyaraja

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. சிறந்த இசை அமைப்பாளர்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்று இருக்கிறார். இவரது தம்பி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

மேலும் இளையராஜா அவர்களின் மகன் கார்த்திக் ராஜா ஒரு இசையமைப்பாளர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பிரபல புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இவரது மறைந்த மகள் பவதாரிணி கூட சிறந்த பாடகி ஆவார். தற்போது தான் உருவாக்கிய சிம்பொனியை அரங்கேற்றுவதற்காக லண்டனுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார் இளையராஜா. போகும் வழியில் விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் ஒரு சில விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இளையராஜா கூறியது என்னவென்றால் நான் லண்டனுக்கு சென்று சிம்பொனியை அரங்கேற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது எனக்கு மட்டும் பெருமை இல்லை இந்தியாவுக்கே பெருமை. நான் Incredible India போல Incredible Ilaiyaraja என்று கூறியிருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜா என்ன இப்படி தற்பெருமை பேசுகிறாரே ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் வென்ற பிறகும் எல்லாம் புகழும் இறைவனுக்கே என்று அமைதியாக சென்றுவிட்டார். ஆனால் இவர் இப்படி கூறுகிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.