Bigg Boss Tamil Season 8 Day 16: விருவிருப்பாக நடந்த Nomination Free டாஸ்க்… Star ஹோட்டல்லாக மாறிய பிக் பாஸ் வீடு!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 16ல் ஆரம்பம் ஆன உடனேயே பிக் பாஸ் தொடக்க நாளில் ஆண்கள் அணி ஒரு ஒப்பந்தத்தை வைத்திருந்தார்கள். அதாவது ஒரு வாரம் எங்களை நாமினேட் செய்யக்கூடாது அப்போதுதான் நீங்கள் விரும்பும் பெட்ரூமை நாங்கள் விட்டு தருவோம் என்று கூறியிருந்தார்கள்.

bigg boss 33

அதைப் பற்றி தான் கலந்துரையாடல் நடந்தது. அதில் பெண்கள் அணி சாச்சனாவுக்கு வயிறு வலி என்று சொல்லும்போது அருண் கோட்டை தாண்டி confession ரூம்க்கு வந்து விட்டார். இது ரூல் பிரேக் ஆயிடுச்சு. அதனால நீங்க போட்ட ஒப்பந்தம் கேன்சல் ஆயிடுச்சு அப்படின்னு பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த பிரச்சனைதான் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு அடுத்ததாக பிக் பாஸ் வீட்டை ஸ்டார் ஹோட்டலாக மாறப் போகிறது என்று பிக் பாஸ் இந்த வார டாஸ்கை கூறினார். முதலில் பெண்கள் ணி ஹோட்டல் நடத்துவது போலவும் ஆண்கள் அணி விருந்தினர்களாக வருவது போலவும் டாஸ்க் நடத்தப்பட்டது.

இதில் பெண்கள் அணியினர் சற்று சொதப்பினார்கள் என்று கூறலாம். ஆண்கள் அணியினர் ஓவர் ஆக்டிங் செய்தது போல் இருந்தது. அதற்குப் பிறகு ஆண்கள் அணியிலேயே ரிவியூஸ் எழுதச் சொல்லி கடைசியில் பவித்ராவை மேனேஜர் பதவியில் இருந்து மாற்றும் படி சொல்லி விட்டார்கள். தனால் பவித்ரா மனம் உடைந்து அழுதார்.

அடுத்ததாக நிர்வாகத்தை மாற்றி மறுபடியும் டாஸ்க் நடந்தது. அதற்கு அடுத்ததாக நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வாங்குவதற்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் தங்கள் பின்னாலே ஒரு பிளாஸ்டிக் கோட்டை போட்டுக்கொண்டு ஒரு வட்ட வடிவில் இருக்கும் காயனை அதன் மீது ஒட்ட வேண்டும் இறுதியில் எந்த அணியில் உள்ளோருக்கு அந்த காயின் ஒட்டப்பட்டு இருக்கிறதோ அவர்கள் அவுட் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார் பிக் பாஸ்.

bigg boss

இந்த போட்டியில் பெண்கள் போட்டி போட்டு சமமாக விளையாடினார்கள். ஆனால் என்னதாக இருந்தாலும் ஆண்களின் பலத்திற்கு பெண்களால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. அதனால் இதை டாஸ்க் இறுதியில் ஆண்கள் வெற்றி பெற்றார்கள். இன்னும் டாஸ்க்கள் இருக்கிறது. அதில் யார் ஜெயிக்கிறார்களோ அந்த அணியினருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை விடுவதாக தெரிவதில்லை. ஆனால் பெண்கள் அணியில் இருந்து இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் அவர்களை செயல்படுத்த விடக்கூடாது என்று ஒவ்வொரு பிளானாக தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் என்ன முடிவு எடுப்பார்கள் அல்லது வார இறுதியில் விஜய் சேதுபதி வந்து தான் இதை பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.