Bigg Boss Tamil Season 8 Day 4: அவங்க பண்றது irritate ஆகுது… புறணி பேசும் Housemates!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 இல் இன்று ஒருவருக்கு ஒருவர் புரணி பேச ஆரம்பித்து விட்டார்கள். காய்கறிகளுக்காக முட்டைக்காக ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஜாக்லினை பற்றி ஒரு பக்கம் புரணி பேசுகிறார்கள். இந்த ஜாக்லின் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல அது எனக்கு கோபம் வர மாதிரி டென்ஷன் ஆகுது என்று சுனிதா கூறுகிறார். பதிலுக்கு அன்சிதாவும் ஆமா அவங்க பேசுறது வந்து நம்மள கோவத்தை ட்ரிகர் பண்ணுது அதனால்தான் நான் அவங்ககிட்ட போறது இல்லை என்று அன்சிதா பேசுகிறார்.

bbbbb1

மறுபக்கம் ரவீந்தரை பற்றி அருண் ஒவ்வொரு இடமும் போய் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் நாமினேஷன்காக தான் இப்படி செய்தார் என்பதே எங்களுக்கு தெரியாது நாங்களே முழிச்சிட்டு இருக்கோம் பிராங்க்ன்னு சொன்னாங்க அதனாலதான் நாங்க வந்தோம் இவங்க பின்னாடி இந்த மாதிரி எல்லாம் வச்சிட்டு வந்தது தெரிஞ்சிருந்தா நாங்க சத்தியமா இதுக்கு நாங்க கோ ஆபரேட் பண்ணி இருக்கவே மாட்டோம் என்று தர்ஷிகாவிடம் பேசி கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ஆண்களா பெண்களா டாஸ்கில் ஜாக்குலின் சத்யா அர்னவ் ஆகியோர் தங்களது பெற்றோரை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜாக்குலின் யாராவது ஒரு நல்ல கருத்தை கூறினாலும் கூட அதை ஏற்க மறுத்து தான் சொல்வது தான் சரி என்பது போல் ஜாக்லின் செய்கிறார். இதனால் அவர் மேல் அதிக வெறுப்பு உண்டாகிறது.

அடுத்ததாக ஏற்கனவே சாச்சனா இந்த வாரம் மறுபடியும் வீட்டுக்குள்ளே செல்வார் என்று வலைத்தளங்களில் பேச்சு வந்தது அதேபோல் இன்றைய ப்ரோமோவில் வீக்கெண்டுக்கு முன்னாடியே சாச்சனா வீட்டுக்குள் சென்று விட்டார். போனதுமே பிக் பாஸ் வழக்கம் போல வெளியில் இருந்து உள்ளே வந்தவர்களை வைத்து என்ன டாஸ்க் கொடுப்பாரோ அதே கொடுத்திருக்கிறார்.

bbbbb2

வீட்டில் ஆடியன்ஸை எங்கேஜ் பண்ணுவது யாரு. ரொம்ப ஆக்டிவா இருக்குராங்க யாரு இன் ஆக்டிவா இருக்காங்க போன்றது போல் சாய்ச்சனா ஒவ்வொருவரையும் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக யாரு ரியலாக இருக்கிறார் பொய்யாக இருக்கிறார் என்ற போட்டியும் நடத்தப்படுகிறது. தற்போது நடப்பது இது பிக் பாஸ் முதல் வாரம் போல் இல்லாமல் அதிக டாஸ்க்கள் இருப்பது நன்றாக இருக்கிறது. ஹவுஸ் மேட்களிடம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து வேறுபாடு ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை கேமரா இருப்பதனால் பாத்து பாத்து பேசியவர்கள் தற்போது கேமராவை மறந்து ஆட்டத்திற்குள் விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.