ஆம்பள மாதிரி இருக்கு.. முதல் நாளிலேயே பலரும் கலாய்த்த போட்டியாளர்.. ஆனாலும் அன்பாக விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை..

By Ajith V

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டாலே வெளியே அறிமுகமாக இருக்கும் நபர்கள் கூட ஒன்றாக உள்ளே செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு மத்தியில் சண்டை வைக்கும் அளவுக்கு தான் டாஸ்க்களும் மற்ற விஷயங்களும் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த சீசனிலும் கூட நிச்சயம் நிறைய சண்டை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முல் எபிசோடிலேயே சில விஷயங்கள் தெரிய வருகிறது.

இந்த முறை நடிகர் ரஞ்சித், சுனிதா, சத்யா, முத்துக்குமரன், ஆனந்தி என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் ஏராளமான பிரபலங்கள் சீரியல் மற்றும் விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர்கள் தான். இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாம் நிறைய இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என வரும்போது அவர்களின் கேரக்டரின் அடிப்படையில் நிச்சயம் அவர்களே மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் பிரபல நடிகையான சௌந்தர்யா நஞ்சுண்டன் போட்டியாளராக உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த சிலர் அவரது குரலை கலாய்த்திருந்தனர். நடிகை சௌந்தர்யா பேசும்போது அவரது குரல் சற்று கனமாக இருப்பதுடன் ஆண்களின் குரல் போல இருப்பதாகவும் பலர் கலாய்த்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அங்கிருந்த சிலர், ‘ஏன் உங்கள் குரல் எப்படி இருக்கிறது? உடம்பு சரி இல்லையா?’ என கேட்டிருந்தனர்.

ஆனால் இதற்கு பதில் சொன்ன சௌந்தர்யா, எனது குரலே ப்படி தான் இருக்கும் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இருந்தும் அங்கிருந்த சிலர் நீ ஆண் குரலில் பேசுவதை நிறுத்திவிட்டு முதலில் பெண் குரலில் பேசு என மிக மிக வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் சௌந்தர்யா போட்டியாளராக உள்ளே அறிமுகம் செய்யப்பட்டதும் விஜய் சேதுபதி அவரிடம் சொன்ன விஷயம் ரசிகர்களை அதிகம் எமோஷனல் ஆக்கியுள்ளது. தனது குரல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் கேட்க இதற்கு பதில் சொன்ன அவர், “உண்மையில் உங்கள் குரல் அழகாக இருக்கிறது. நான் சத்தியமாக கிண்டல் செய்யவில்லை. நான் அதிகம் உங்கள் குரலை ரசித்தேன்.

ரொம்ப ஸ்வீட்டா இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் கரகரவென பேசும் ஆண்களை பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள். அவர்களுக்கு ஸ்வீட்டான குணம் இருக்கவே இருக்காதா. உங்களது அழகு உங்கள் குரலில் வெளிப்படாது. உங்களுடைய குணத்தில் தான் அழகு இருக்கிறது” என விஜய் சேதுபதி கூறியதும் இதை பார்த்தவர்கள் கூட ஒரு நிமிடம் நெகிழ்ந்து போய்விட்டனர்.

குரல் பற்றி நினைக்காமல், தனது குணத்தின் மூலம் நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சௌந்தர்யா விஜய் சேதுபதி ஸ்டைலில் பதில் கொடுப்பார் என்றே தெரிகிறது.