கமல் மாதிரி சம்பவம் பண்ணிட்டாரே.. முதல் போட்டியாளரையே ஒரே கேள்வியில் கதற விட்ட விஜய் சேதுபதி.. வீடியோ

By Ajith V

Published:

Bigg Boss Tamil Season 8: தமிழில் இதுவரை நடந்து முடிந்த ஏழு பிக்பாஸ் சீசன்ளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தால் தற்போது எட்டாவது சீசனும் ஆரம்பமாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலே அதில் சிறப்பம்சமான விஷயம் என்னவென்றால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் போட்டியாளர்களாக உள்ளே இறங்குவதுடன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களது குணங்கள் எப்படி இருக்கும் என்பதையும் மக்களால் தெரிந்து கொள்ள முடியும்.

இதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழிலும் கூட பிரபலங்கள் கலந்து கொண்டு சண்டை போடுவது, அரட்டை அடிப்பது என பல்வேறு நிகழ்வுகள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனம் பெறும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பிரபலம் கலந்து கொண்டு அவரது குணத்தை வெளிப்படுத்தும் போது அவருக்கு ஆதரவாக இருந்த பலரும் கூட நிஜ வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டு எதிராக கருத்துக்களை வெளியிடுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்று வரும் நபர்களின் வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நிகழ்வதால் இந்த நிகழ்ச்சி பலது மத்தியிலும் அதிக கவனம் பெற்று வருகிறது. தமிழில் முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசும் விஷயங்கள் மிக அசத்தலாகவும் அமைந்திருக்கும்.

அப்படி ஒரு சூழலில் எட்டாவது சீசனுக்கு முன்பாக அவர் பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்திருந்த நிலையில் தற்போது அவரது இடத்தில் இந்த நிகழ்ச்சியின் நெறியாளராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு மிகப்பெரிய காரணமாக கமல்ஹாசனின் கேள்வி பதில் செக்மெண்ட்டும் இருந்து வந்தது.

ஆனால் அவரது இடத்தை விஜய் சேதுபதியால் நிரப்ப முடியுமா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் எட்டாவது சீசனின் முதல் போட்டியாளராக Fatman ரவீந்தர் உள்ளே வந்ததும் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. Fatman ரவீந்தர் கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வந்தார்.

ரவீந்தர் முதல் போட்டியாளராக உள்ளே வந்ததும் அவரிடம் பேசிய விஜய் சேதுபதி, “நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ பண்ணுவீங்கல்ல சார்?” என கேட்கிறார். உடனடியாக, ரவீந்தரும் ஆமாம் என கூற, “நல்ல வருமானம்னு கேள்விப்பட்டேன். அப்படியா?. ஒவ்வொரு தடவையும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தால் வெளியே நல்ல வருமானம் வருகிறது” என்கிறார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கி விடுகின்றனர். இதன் பின்னர் பேசும் ரவீந்தர், “ஒரு அவமானம் இல்லாத வருமானம் சார். நிகழ்ச்சியை நன்கு ஆராய்ந்து தான் ரிவ்யூ செய்தோம். இத்தனை நாட்களாக நான் ரிவ்யூ செய்தவர்கள், இனிமேல் எனது ஆட்டத்தை ரிவ்யூ செய்ய காத்திருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனை போல பதற்றம் இல்லாமல் நிச்சயம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றிம் எதிர்பார்க்கப்படுகிறது.