நாட்டுக்காக உயிரை விட்டவரைப் பற்றிக் கவலையில்ல.. இப்ப இதுவா முக்கியம்..? மணிமேகலை-பிரியங்கா விவகாரத்தில் சீரியல் நடிகர் நறுக் பதில்..

By John A

Published:

கடந்த இருவாரமாக சின்னத்திரை வட்டாரத்தில் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது மணிமேகலை – பிரியங்கா கருத்து வேறுபாடு. குக்கு வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னரை ஒருபுறம் பிரியங்கா வென்றாலும் ஆனால் அதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக நடந்த மோதல்கள் சின்னத்திரை வட்டாரத்தையே அதிர வைத்தது.

குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பிரியங்கா தொகுப்பாளி போல் செயல்படுகிறார் எனவும் இதனால் தனக்கு அங்கு வேலை இல்லை எனவும், தனது சுயமரியாதை தான் முக்கியம் எனவும் தொகுப்பாளினி மணிமேகலை அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

மகனின் ஆசையை நிறைவேற்றி நடிகர் நெப்போலியன் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்..

இச்சம்பவம் தொடர்பாக கருத்து மோதல் அதிகரித்து வந்தது. மேலும் இருவருக்கும் ஆதரவாக பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் குரல் கொடுத்தனர். தற்போது இவ்விவகாரம் முடிந்து நிகழ்ச்சியும் முடிந்த நிலையில் சின்னத்திரை நடிகரும், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனுமான ஸ்ரீ குமார் கணேஷ் பளார் கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார்.

அதில் மணிமேகலைக்கு நீதியா? பிரியங்காவுக்கு நீதியா என்று பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா மேஜர் முகுந்த் பற்றி யார்கிட்ட கேட்டாலும் தெரியாது. அவர் நம் நாட்டுக்காக உயிர் விட்டவரு, அத பத்தியெல்லாம் நமக்கு கவலையும் கிடையாது, என்று நறுக்கென பதில் அளித்துள்ளார். சின்னத்திரையில் விஜய்டிவியில் காவ்யாஞ்சலி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான ஸ்ரீ குமார், ஆனந்தம், அகல்யா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், பல படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் இந்த பதிலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.