வாழை படத்துல அந்த சீன் எடுக்கிறப்போ கத்தி அழுதுட்டேன்… திவ்யா துரைசாமி எமோஷனல்…

By Meena

Published:

திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

2019 ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யா துரைசாமி. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் திவ்யா துரைசாமி. அதற்கு அடுத்ததாக 2024 இந்த வருடம் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதன்மூலம் அவருக்கு மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார் திவ்யா துரைசாமி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார் திவ்யா துரைசாமி.

அவர் கூறியது என்னவென்றால், வாழை பத்தில் நடிச்ச நாங்க எல்லாருமே ரொம்பவே கஷ்டப்பட்டோம். முக்கியமா இந்த லாரில வரும்போது பயமா இருக்கும். வெறும் லாரி போகும் போது ஒன்னுமே தெரியாது. வாழ தார் ல்லாம் ஏத்தி அதுவே லாரி கம்பிக்கு மேல வந்துரும் அதுக்கு மேல உட்கார வைக்கும் போது அந்த இடத்துல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த லாரி போகும்போது வளைவு எல்லாம் திரும்பும் போது அப்படியே நாங்களே விழுகிற மாதிரி சாயும் அந்த சீன்ல எல்லாம் நான் கத்தி ஆர்ப்பாட்டம் போட்டு அழுது இருக்கேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் திவ்யா துரைசாமி.