என்னுடையது Love Marriage இல்ல… திருமணத்தைப் பற்றி ஓபனாக பேசிய சரண்யா பொன்வண்ணன்…

By Meena

Published:

சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகை ஆவார். இவரின் இயற்பெயர் ஷீலா கிறிஸ்டினா என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சரண்யா 1987 முதல் 1996 வரை முன்னணி கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் சரண்யா பொன்வண்ணன். அதற்குப் பிறகு எட்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

பிறகு 2003 ஆம் ஆண்டு சினிமாவில் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்தார் சரண்யா. அதற்கு பிறகு அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்த பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்தை பற்றி சமீபத்தில் ஒரு நேர்காலையில் ஓபனாக பேசியிருக்கிறார் சரண்யா. அவர் கூறியது என்னவென்றால், என்னுடையது காதல் திருமணம் இல்லை. பொன்வண்ணன் அவர்கள் என்னிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன் என்று ப்ரொபோஸ் பண்ணாங்க. அதுவும் ஃபோன்ல தான் சொன்னாங்க.

அதுக்கப்புறம் அத நான் எங்க வீட்ல சொன்னேன். உடனே விசாரிச்சாங்க. அப்போ பாரதிராஜா சார் தான் பொன்வண்ணன் ரொம்ப நல்ல பையன் டீசென்ட் ஆன பையன் நீ நம்பி கல்யாணம் பண்ணலாம் அப்படின்னு ரெக்கமண்டேஷன் பண்ணாரு. அப்புறம் ரெண்டு வீட்லயும் பார்த்து பேசி முடிவு பண்ணி எங்க கல்யாணம் அரேஞ்ச் மேரேஜா தான் நடந்துச்சு. அவர் என்னை லவ் பண்ணாரு நான் பண்ணல கல்யாணத்துக்கு பிறகு தான் நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சேன் என்று தன் திருமணத்தை பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.