மகளின் தலையில் சிசிடிவி கேமரா வைத்த தந்தை.. பின்னணி தெரிஞ்சு பதறிய நெட்டிசன்கள்..

Published:

இன்று உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில் பெண்களுடைய பாதுகாப்பு இன்னும் பல நாடுகளில் கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. பெண் குழந்தைகள் தொடங்கி வயதாக இருக்கும் பெண்களுக்கு வரை இங்கே பாதுகாப்பில்லாத ஒரு சூழல் இருந்து வரும் நிலையில் இரவில் விபரீதங்கள் நடப்பதை தாண்டி தற்போது பட்டப் பகலிலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சோகம் தான் இருந்து வருகிறது.

இதற்காக ஒவ்வொரு நாட்டில் உள்ள அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் அவர்களுக்கு எதிரான தவறுகள் குறைந்தபாடில்லை. இன்னொரு பக்கம் இந்த சமுதாயத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதுடன் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படி எல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி எந்த நேரமும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற பதற்றமான சூழல் தான் அனைத்து இடங்களிலும் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள தந்தை ஒருவர் தனது மகள் பாதுகாப்பாக இருப்பதற்கு செய்த விஷயம் தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து தந்தைகளுமே தங்களின் மகள்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பார்கள். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பிற்காக அவரது தலையில் சிசிடிவி கேமரா ஒன்றை வைத்துள்ளது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேடிக்கையாகவும், இன்னொரு பக்கம் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.

அந்தப் பெண் இது தொடர்பாக நேர்காணல் ஒன்றை கொடுக்க அப்போது தந்தை சிசிடிவி கேமராவை தனது தலையில் வைத்ததை அவர் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். தான் செல்லும் இடம் எங்கே என்பதை தந்தை அறிந்து கொள்ளவும் தான் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும் என்பதற்காகவும் அவர் இப்படி செய்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தந்தை சிசிடிவி கேமராவை தலையில் ஃபிட் செய்த போது அதனை மறுக்காமல் ஏற்றுக் கொண்டதை பெருமையாக குறிப்பிடும் அந்த பெண், இந்த கேமரா மூலம் தனது தந்தை எப்போதும் தன்னை கண்காணித்து பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார் என்றும் கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சூழலில் தனது பெற்றோர்கள் இந்த புதுமையான ஐடியாவை கையில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது எக்ஸ் தள்த்தில் “வேற லெவல் செக்யூரிட்டி” என வேடிக்கையாக குறிப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள நிலையில் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...