சிவன் கோயிலின் சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

By Revathi

Published:

கும்பகோணத்தில் அடுத்துள்ள  தண்டந்தோட்டம் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலிலிருந்து 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சம்பந்தர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தண்டந்தோட்டம்  கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலியில் சம்பந்தர் சிலை கடந்த 1971-ம் ஆண்டு திருடப்பட்டது. இந்நிலையில் சிலை கடந்தப்பட்டது குறித்து சிலை தடுப்பு பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சிலையின் புகைப்படத்தை வைத்து பல்வேறு அருங்காட்சியங்கள், ஏல மையங்களில் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்காவில் இருக்கும் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் ஏல மையங்களில் இருக்கும் இணையதளத்தில் காணாமல்போன சிலையை கண்டனர்.

இருப்பினும் காணாமல்போன சிலைகள் ஒன்று தானா என்பதை கண்டறிய புகைப்பட நிபுணர் களுக்கு அதன் புகைப்படத்தின் நகல்களை அனுப்பி வைத்தனர். ஆய்வுக்குப் பின் இரண்டு புகைப்படங்களில் இருக்கும் சிலைகள் ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர்.

இவனிடத்தில் அமெரிக்காவில் இருக்கும் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வருமாறு சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். மேலும், விரைவில் சிலையை மீட்டு சிவன் கோயிலில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment