நடிகர் யோகிபாபு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் மனைவியுடனும் அவ்வப்போது நேரத்தை அவர் செலவழித்து வருகிறார்
சமீபத்தில் அவர் தனது மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பயபக்தியுடன் மனைவியுடன் யோகிபாபு இருக்கும் இந்த புகைப்படம் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது
இந்த நிலையில் யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமண வரவேற்பு விரைவில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதும் இந்த வரவேற்பில் முக்கிய நடிகர், நடிகைகள் பங்குகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது