ஐஏஏஸ், ஐபிஎஸ் ஆக ஆசையாக.. சென்னையில் யுபிஎஸ்சி இலவச பயிற்சியில் சேர சூப்பர் வாய்ப்பு

By Keerthana

Published:

சென்னை: சென்னை அசோக் நகர் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சார்பில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வரும் ஜூலை 12-ம் தேதி கடைசி நாள் என்று அந்தஅமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; சென்னை அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விரைவில் வரும் யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயனடையலாம். சிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள், வசதியான ஸ்டடி ஹால், தேவையான நூல்களைப் பயன்படுத்த நூலகம், இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சார்பில் அளிக்கப்படுகிறது.

குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமிக்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதங்கள் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் இந்த பயிற்சியில் சேர இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 12 ஆகும். போட்டித் தேர்வுக்கான தேதி ஜூலை 14 ஆகும்.

போட்டித் தேர்வு பாடத்திட்டம் மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து கேள்விகள் கேட்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9363923451 மற்றும் 9500481074 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில் சேர https://forms.gle/wr9eyHeoKmRy6Etw5 இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம் என்று குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.