எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசி: ரூ.10,000 கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்..!

எல்ஐசி என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அவ்வப்போது புதிய பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதும் இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் எல்ஐசியின் புதிய திட்டமான எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசியில் வருடத்திற்கு ரூ.10,000 என 15 ஆண்டுகள் கட்டினால் முதிர்வுத்தொகை சுமார் மூன்று லட்சம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலிசி சிறப்பானது என்றும் லைஃப் கவர் செய்வதோடு முதிர்வுத் தொகையும் நல்ல தொகையாக கிடைக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த பாலிசியின் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசி என்பது ஒரு தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரட்டை நன்மையை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலையில் பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, பாலிசியின் முழு காலத்தையும் ஆயுள் காப்பீட்டாளர் வாழ்ந்தால், நல்ல முதிர்வுப் பலனை வழங்குவதன் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்திற்கான பணத்தை உருவாக்க இந்தத் திட்டம் உதவுகிறது.

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் பாலிசி: தகுதி மற்றும் அம்சங்கள்

இந்த எல்ஐசி பாலிசியில் குறைந்தபட்ச நுழைவு வயது 8 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 55 ஆண்டுகள்.

இது கடன் வசதியுடன் ஆட்டோ கவர் வசதி மற்றும் பணப்புழக்க தேவைகளை வழங்குகிறது.

இது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும், முதிர்ச்சியின் போது தொகை மொத்தமாக வழங்கப்படும்.

முதிர்ச்சியின் போது, பாலிசிதாரர் அடிப்படை காப்பீட்டுத் தொகை மற்றும் லாயல்டி கூடுதலாகப் பெறுகிறார்.

பாலிசியின் 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கடன் வசதி கிடைக்கும்.

இந்த திட்டம் ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை: ரூ 75,000.

அதிகபட்ச காப்பீட்டுத் தொகை: ரூ 3,00,000.

இந்த பாலிசியில் பாலிசிதாரர் 15 வருட காலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 10,000 முதலீடு செய்ய திட்டமிட்டால், பாலிசிதாரருக்கு முதிர்வின்போது ரூ. 2,00,000 மற்றும் லாயல்டி என சேர்த்து சுமார் 3 லட்சம் வழங்கப்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews