தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்

கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இருவருமே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை தங்களது எழுத்தில் பதிவிட்டு விடுவர். பின்னாளில் ஏதாவது ஒரு தருணத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும். இதற்குத் தகுந்த உதாரணம் எழுத்தாளர் சுஜாதாவும், கவிஞர் கண்ணதாசனும். எழுத்தாளர் சுஜாதாவோ அறிவியலில் அடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள் பற்றி தனது கதைகளில் தற்செயலாக எழுதியிருப்பார்.

அதோபோல்தான் கவிஞர் கண்ணதாசனும் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து வரிகள் இயற்றுவார். இருவருக்கும் அப்படி ஒரு அற்புத ஞானம். இதற்கு உதாரணமாக விளங்கும் ஒரு சம்பவம் தான் இது.

1966-ம் ஆண்டு ஆர்.ஆர் சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் மகாகவி காளிதாஸ். சிவாஜி, சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஆர்.எஸ்.மனோகர், நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.  இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அதனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் இவர் எழுதிய பாடல் ஒன்று இவருக்கே பின்னாளில் பலித்தது.

கதைப்படி, ஒரு அறிவாளியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற இளவரசி சிலரை அவமானப்படுத்த, அவர்கள் அனைவரும் இணைந்து வெள்ளந்தியாக இருக்கும் சிவாஜியை அறிவாளி என்று கூறி இளவரசி சவுகார் ஜானகிக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். முதலிரவு அன்று இவர், வெள்ளந்தி என்று தெரியவர உடனடியாக அவரை அழைத்து சென்று, காளியிடம் விட்டு, இவரை எனக்கு சமமாக மாற்றிக்கொடு என்று சொல்லிவிட்டு மயக்கமடைந்துவிடுவார்.

இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?

அப்போது நம்மால் இவருக்கு இப்படி ஆகிவிட்டே என்று நினைத்த வெள்ளந்தியான சிவாஜி, எனக்கு அறிவை கொடு என்று காளியிடம் வேண்டுகிறார். அப்போது அவர் முன் தோன்றும் காளி, நீ நாடெங்கிலும் பாடல் பாடி அமரகவியாக வலம் வருவாய் என்று வரம் கொடுப்பார். அந்த சமயத்தில் வரும் பாடல் தான் யார் தருவார் இந்த அரியாசனம் என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். இந்த பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு, பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வர் இருக்கையில் அமர்ந்தபோது, அவருக்கு அரசவை கவிஞர் பதவியை வழங்கி அழகு பார்த்தார். இவ்வாறு அவர் எழுதிய பாடல் பல வருடங்கள் கழித்து அவருக்கே பலித்துள்ளது ஆச்சர்யமான ஒன்றுதான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...