என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!

9ab211b00c0fe8d27315925c248a05b9

.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம்

அரிசியை தானமாய் தர பாவங்கள் தொலையும்…

வெள்ளியை தானமாய் தர மனக்கவலை மறையும்

தங்கம் தானமாய் தர தோஷம் விலகும்..

பழங்களைத் தானமாய் தர புத்தி, சித்தி கிட்டும்

தயிர் தானமாய் தர இந்திரிய விருத்தியாகும்

நெய் தானமாய் தர நோயைப் போக்கும்

பால் தானமாய் தர துக்கநிலை மாறும்

தேன் தானமாய் தர பிள்ளைப்பேறு கிட்டும்

நெல்லிக்கனி தானமாய் தர ஞானம் உண்டாகும்

தேங்காய் தானமாய் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

தீபங்களை தானமாய் தர கண்பார்வை தெளிவாகும்

கோ (பசு மாடு) தானமாய் தர ரிஷி, வேத, பிதுர்கடன் விலகும்

பூமியை தானமாய் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

ஆடையை தானமாய் தர ஆயுள் விருத்தியாகும்

அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

நீரை தானமாய் தர சகல தரித்திரமும் தீரும்..

என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா!?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews