ChatGPT தொழில்நுட்பத்திற்கே விபூதி அடித்த ஹேக்கர்கள்: ஒரு லட்சம் கணக்குகள் ஹேக்..!

உலகம் முழுவதும் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஏஔஇ தொழில் நுட்பமான
ChatGPT காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்து வந்தாலும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்துவிட்ட நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ChatGPT கணக்குகளையே ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. உலகம் முழுவதும் ChatGPTயின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலான கணக்குகள் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் கணக்குகள் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை வெளியான தகவலின் படி ஒரு லட்சத்து ஆயிரம் ChatGPT கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் பெரும்பாலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தான் இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் 12,632 கணக்குகளும் பாகிஸ்தானை சேர்ந்த 7624 கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ChatGPT என்பது சாட்போட் மேம்பாட்டு தளமாகும். இது பயனர்கள் இயற்கையான மொழி செயலாக்கத்துடன் சாட்போட்களை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த தளம் வணிகங்கள் மற்றும் டெவலப்பர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

ChatGPT பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றவும் மற்றும் அவர்களின் கணக்குகளைப் பாதுகாக்க இரு காரணி அங்கீகாரத்தை இயக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்க உதவும் சில குறிப்புகள்:

* வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும், அவற்றை அடிக்கடி மாற்றவும்.
* முடிந்தவரை இரு காரணி அங்கீகாரத்தை இயக்கவும்.
* நீங்கள் எந்த இணைப்புகளைக் கிளிக் செய்கிறீர்கள் மற்றும் எந்த இணைப்புகளைத் திறக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
* உங்கள் மென்பொருளை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
* ஃபிஷிங் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews