உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது என்பதும் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணி 403 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போதும் 400க்கும் அதிகமான இலக்கு இருந்தாலும் இந்திய அணி அதை எட்டி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.