உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை அடிக்கடி அவசியம்

வாழும் இந்த உலகம் முன்பு போல் இல்லை அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்வைப்போல் தற்போதைய விஞ்ஞான உலகம் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அவசரமான இந்த மாடர்னான உலகம்தான் என்றால் மாற்றுக்கருத்தில்லை. அது போல் எத்தனையோ புது விதமான நோய்கள், பிரச்சினைகள், சிறு குழந்தைகள், பெண்கள் துன்பப்படுதல், பாலியல் ரீதியான பல பிரச்சினைகள், திருமணம் இல்லை, குழந்தை இல்லை வாழ்க்கையே நிம்மதி இல்லை, உலக நாடுகளுக்குள் சண்டை என உலகமே நிம்மதியற்று போய் கொண்டிருக்கிறது.

தொடர் தெய்வ வழிபாடு மட்டுமே இதற்கு கை கொடுக்கும் . அடிக்கடி திருக்கோவில்களில் அந்த பகுதி பெண்களை வைத்து திருவிளக்கு பூஜை நடத்த வேண்டும் நாம் ஒருவருக்காக ஒரு சிறு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டாலே அந்த பிரச்சினை தீருகின்ற நிலையில் பலதரப்பட்ட மக்களுக்காக பலரும் சேர்ந்து விளக்கு ஏற்றி வழிபட்டால்  உலகம் அமைதியாகி எல்லா பிரச்சினைகளும்  என்பதில் ஐயமில்லை.

பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்து அடிக்கடி அந்த பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி கேட்டு திருவிளக்கு பூஜை நடத்த வேண்டும்.

Published by
Staff

Recent Posts