இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம் என்றால் அது திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.

திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் இந்த திருநாள் தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என 5 நாள்களாக தீபங்கள் ஏற்றப்படும்.

Ashtalakshmi
Ashtalakshmi

முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாள். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.

அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள் தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானை குறித்து கொண்டாடும் விழா. இதையே அண்ணாமலையார் தீபம் எனகின்றனர்.

அதென்ன பரணி தீபம்னு கேட்பாங்க. அதாவது, திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் பரணி தீபம் என்று பெயர் பெற்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் 5 தொழில்களையும் குறிக்கும். விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இப்படி நீங்க விளக்கேற்றி வழிபட்டால் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள். ஐஸ்வர்யம் பெருகும்.

பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews