இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் ஃபாக்ஸ்கான்.. 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!

ஃபாக்ஸ்கான், நிறுவனம் அடுத்த ஆண்டு பெங்களூரில் ஐபோன் தயாரிப்புகளை மேற்கொள்ள இருப்பதை அடுத்து ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் பயன்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து ஐபோன் தயாரிப்புகளில் தீவிரமாக ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐபோன் மற்றும் ஐபோன் உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்தும் நிறுவனங்களில் ஒன்றான ஃபாக்ஸ்கான், பெங்களூரில் மிகப்பெரிய தொழிற்சாலையை உருவாக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் இதில் ஐபோன்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் அடுத்த ஆண்டு பெங்களூரு நகரில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கவுள்ளது. இந்நிறுவனம் தனது புதிய உற்பத்தி ஆலைக்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தேவனஹள்ளியில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாகவும், இந்த ஆலை தொடங்கப்பட்டால் 100,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிள் உற்பத்திக்காக சீனாவை நம்பியிருந்த ஆப்பிள் நிறுவனம், கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சனைக்கு பின் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வதன் மூலம், சீனாவை நம்பியிருப்பத ஆப்பிள் தற்போத் உற்பத்தி சந்தையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள ஃபாக்ஸ்கானின் புதிய உற்பத்தி ஆலை இந்திய உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை தயாரிப்பது இதுவே முதல் முறை. இந்த ஆலை கணிசமான எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்கும் மற்றும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews