சூப்பர் ஸ்டார் திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்.. இது மட்டும் இருந்தா தினமும் ரஜினிக்கு தேனிலவு தானாம்..

சினிமாவின் உச்சத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி தினமும் குடி, சிகரெட் என இஷ்டத்துக்கு இருந்தாராம். அவர் வாழ்வில் தென்றலென ஒரு பெண் வந்து பின் தாராமாக மாறி அவரை நல்வழிப்படுத்தி ஆன்மீகத்தின் பக்கம் நாட்டம் கொள்ளச் செய்து இன்று ஒரு சமூகத்தில் உயர்ந்த மனிதனாக மாற்றிய பெருமை அவர் மனைவி லதாவுக்கு மட்டுமே உண்டு. ரஜினி-லதா திருமணம் நடந்தது ஒரு சுவாராஸ்ய வரலாறு.

பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லு முல்லு படத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்த போது அவரை பேட்டியெடுக்க ஒரு பெண் நிருபர் வருவதாக சொல்லப்பட்டது. அப்போது, அதுதான் தனது வருங்கால மனைவி என்பது ரஜினிக்கு தெரியாது. அதேபோல், தனது வருங்கால கணவரைத்தான் பேட்டி எடுக்கப்போகிறோம் என்பது லதாவுக்கும் தெரியாது.

முதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு பிடித்துப்போனது. லதாவின் சகோதரியை திருமணம் செய்த ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் பேசி லதாவின் குடும்பத்தை சம்மதிக்க வைத்தார் ரஜினி. இத்திருமணத்தின் மூலம் ஒய்.ஜி.மகேந்திரனின் சகலையாக மாறினார் ரஜினி. தனது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் தவிர யாரையும் அழைக்க வேண்டாம் என முடிவெடுத்த ரஜினி திருப்பதில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

பலரது ரிங்டோனாக ஒலித்த சரவணன் மீனாட்சி ஏலோ.. ஏலேலோ பாடல்.. அடேங்கப்பா இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் பாடியதா..!

ஆனாலும், பத்திரிக்கையாளர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதால் அவர்கள் எல்லோரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். லதாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். என் சகோதரரை சம்மதிக்க வைக்க சில மாதங்கள் ஆகிவிட்டது. நான் வாழ்க்கையில் எல்லா ஏற்ற இறக்கங்களையும் பார்த்தவன். நாளை திருப்பதியில் அதிகாலை 3.30 மணிக்கு திருமணம். நீங்கள் யாரும் என் திருமணத்திற்கு வரவேண்டாம்.
திருமண புகைப்படத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.

அதை நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளுங்கள். சில நாட்கள் கழித்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறேன். அதற்கு கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கூப்பிடுகிறேன். தயவு செய்து என் திருமணத்திற்கு வரவேண்டாம்’ என்றார் ரஜினி. அப்போது ஒரு நிருபர் ‘வந்தா?’ என கேட்க, ரஜினிக்கு கோபம் வந்துவிட்டது. ‘உதைப்பேன்’ என்றார். அதற்கு அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்படி பேசியதற்காக நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?

அதன்பின் ஒரு நிருபர் ’தேனிலவுக்கு எங்கே போறீங்க?’ எனக்கேட்க, ரஜினியோ கூலாக ‘தேனிலவா?. ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் தேனிலவுதான்’ என சிரித்துகொண்டே சொன்னார்.
அடுத்த நாள் திருப்பதியில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ லதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். சில நாட்கள் சொன்னதுபோலவே வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார். அதில், சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு ரஜினி மனைவியின் அன்பால் தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி முழுதாக ஆன்மீகத்தின் பக்கம் நாட்டம் கொண்டு இமயமலை உள்ளிட்ட ஆன்மீகப் பகுதிகளுக்குச் சென்று தனது வாழ்க்கையின் ஸ்டைலையே மாற்றினார் சூப்பர் ஸ்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...