இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கிய நிலையில் துரதிஷ்டவசமாக கோட்டை விட்டதால் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் 28 வது போட்டி இன்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் நான்கு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.
விராட் கோலி 59 ரன்கள், டுபிளெஸ்ஸிஸ் 84 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் சரியாக விளையாடாததால் அந்த தொடக்கத்தை இந்த அணியினர் சரியாக பயன்படுத்தவில்லை.
இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணி 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் டி20 போட்டியை பொறுத்தவரை இது சாத்தியம்தான் என்று கூறப்பட்டது. ஆனால் 18 வது ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும் 19வது ஓவரில் ஒரு விக்கெட் இழந்ததை அடுத்து பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் பெங்களூர் அணி ஆறு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் அணி நான்கு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், லக்னோ, சென்னை ஆகிய அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.