குழந்தைகளுக்கு பிடித்த உருளைகிழங்கு வைத்து சத்தான ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்யலாமா?

குழந்தைகளுக்கு பொதுவாக உருளைகிழங்கு என்றாலே மிகவும் இஷ்டம். அதை வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்யும் போது விரும்பு சாப்பிடுவார்கள். இப்பொழுது உருளைகிழங்கு வைத்து ஃப்ரெஞ்ச் ஆம்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு – 2 வேகவைத்து மசித்தது.
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை – தேவைக்கு ஏற்ப
முட்டை – 3
மிளகு பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடைப்பிடிக்கவேண்டியவைகள் என்ன என்ன தெரியுமா?

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மூன்று முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும் ,ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.

அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.

மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். பொன்னிற ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews