நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளியாக நாளை அறிக்கை!

தமிழ் சினிமாவில் கனவு கன்னி நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் நயனும் விக்னேஷ் சிவன் நாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக கொடுத்துள்ள அப்டேட் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. நயன் விக்கி இருவரும் அவர்களது குழந்தைகளின் கால்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வைரலானது.

நடுரோட்டில் தனியாக விடாமுயற்சியுடன் நடந்து செல்லும் குஸ்பு! வைரல் வீடியோ!

Capture 4

இந்நிலையில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது நயன் – விக்கி ஜோடி தல தீபாவளியை தங்களது இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பள்ளி குழந்தைக்குகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி – வேர்க்கடலை உருண்டை!

இதற்கிடையில் வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்த விசாரணைக்குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews