திரிஷாவிடம் சரண்டர் ஆன மன்சூர் : மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கடந்த ஒரு வாராமாக நிலவி வந்த சர்சைக்கு தற்போது மன்னிப்புக் கேட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மன்சூர் அலிகான். நடிகை திரிஷாவை அவமதிக்கும் வகையிலும் பெண்ணினத்திற்கு எதிரான வகையிலும் பேசிய மன்சூர் அலிகானை திரிஷா சமூக ஊடகத்தில் வன்மையாகக் கண்டித்து பதிவிட்டார். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில் குஷ்பு, பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் உலாவந்த நிலையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். பின் திடீரென தலைமறைவாகி மீண்டும் மறுநாள் காவல்நிலையத்தில் ஆஜரானார்.

மேலும் தான் பேசிய கருத்து சரிதான் என்ற முறையில் தொடர்ந்து வாதிட்டு வந்தார். இதனால் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் வலுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று மன்சூர் அலிகான் திடீரென மன மாற்றம் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ”ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது என காவல் அதிகாரி அம்மையார் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

சீனு இராமசாமியை வம்புக்கு இழுத்த புளு சட்டை : இப்படியா கலாய்கிறது..!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடற கற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம்.

மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல், கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால் தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூராம்மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10 ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனி மேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன் “ என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews