மனது சரியில்லையா கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகமும் கேளுங்க

காரைக்குடியை சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் இவர் ஆரம்ப காலத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்டவற்றில் இருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆன்மிகவாதியாகி தீவிர கடவுள் பற்றாளராகி விட்டார் இவர்.

அதன் பின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதினார். பின்பு இயேசு காவியம் எழுதினார். பின்னாட்களில் மிகப்பெரிய ஆன்மிகவாதியாக விளங்கினார் இவர்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் மட்டுமே வானதி பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள் வெளியிட்டு மிகப்பெரும் அளவில் புத்தகங்கள் விற்று தீர்ந்து விட்டது.

எத்தனை புதிய பதிப்புகள் போட்டாலும் அவை அனைத்தும் விற்று தீர்ந்து விடுகின்றன. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் நூல் அவர் குரலிலே பேசப்பட்டு ஆடியோ வடிவிலும் கிடைக்கிறது. ஹிந்து மதம், கோவில்கள், கடவுள்கள் குறித்து என்ன சந்தேகம் இருந்தாலும் இந்த நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மனது சரியில்லை என்றால் மனம் ஒரு ஆன்மிக நிலையை அடைய வேண்டும் என்றால் இவரது குரலிலேயே இருக்கும் அர்த்தமுள்ள இந்து மதத்தை கேட்கலாம்.

மனம் அமைதிப்படும்.

அதன் லிங்க் இதோ.

http://findtamilmp3.blogspot.com/2008/10/download-arthamulla-indhu-madham.html

Published by
Staff

Recent Posts