தமிழகம்

ஆளுநர் பொங்கல் விழாவை: திமுக, பாமக புறக்கணிப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. விழாவில் போது கவர்னர் விழா மையத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

அதே போல் மைதான் முழுவதும் தோரணங்கள், மாட்டுவண்டி, பொங்கல் பானை உள்ளிட்டவைகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விழா தொடங்கியதை அடுத்து முன்னாள் ஆளுநர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதையை சந்தித்த திமுக நிர்வாகிகள்: டெல்லிக்கு பறக்கும் ஆளுநர்!!

இந்நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வில்லை என தெரிகிறது. அதே போல் பாமக மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டோர் புறக்கணித்தாக தெரிகிறது.

அதே சமயம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆளுநர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

மதிய உணவில் கிடந்த எலி,பல்லி: அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

அதே போல் நீதிபதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Published by
Revathi

Recent Posts