ஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?

சொந்த உறவுகளுக்குள்ளாகவே கடன் கொடுக்கத் தயங்கும் இந்தக் காலத்தில் திரைத் துறையில் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காக அதுவரை நேரில் பார்த்திடாத இயக்குநருக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே 2 லட்சத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று போற்றப்படும் இயக்குநர் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம்தான் பேசும் தெய்வம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ், எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

மும்முரமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, நிதி பிரச்சனையின் காரணமாக திடீரென நின்றுபோன நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்’ இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது பணத்தேவை காரணமாக எஸ்.எஸ்.வாசனை நேரில் சந்தித்துள்ளார். அவரின் நிலை அறிந்த எஸ்.எஸ்.வாசன், தனது மேனேஜரை அழைத்து இவர்களுக்கு 2 லட்சத்திற்காக செக்கை கொடுத்துள்ளார்.

நடிகர் திலகத்துக்கே வசன உச்சரிப்பில் வந்த சந்தேகம்.. சொல்லிக் கொடுத்த முஸ்லிம் பிரமுகர்

தான் யார் என்றே தெரியாத ஒருவர் தனக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எண்ணிக் கொண்டிருக்க, நான் கஷ்டப்படும்போது எனக்கு ஒருவர் உதவி செய்தார். அவருக்கு கைமாறு செய்ய வேண்டி தான் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று எஸ்.எஸ்.வாசன் பதில் அளித்துள்ளார்.

1948-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தை இயக்கி தயாரித்தவர் எஸ்.எஸ்.வாசன். இந்த படம் ஒரு கட்டத்தில் நிதி பிரச்சனை காரணமாக நின்றுபோனது. எஸ்.எஸ்.வாசன் தனது சொத்துக்களை அடமானம் வைத்து படப்பிடிப்பை நடத்தியும் பணம் போதவில்லை. இதனால் 30 லட்சத்திற்கு மேல் கடனாகியுள்ளார். அப்போது தி இந்து பத்திரிக்கை அதிபர் ஸ்ரீனிவாச அய்யங்கார் எஸ்.எஸ்.வாசனை அழைத்து 30 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். படம் வெளியாகும்போது இந்த பணத்தை கொடுத்தால் போதும். இதற்கு நீ ஒரு பைசா கூட வட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

நீ நல்லவன் திறமைசாலி, வாக்கு தவறாதவன் அதனால் தான் உன்னை நம்பி பணம் கொடுத்திருக்கிறேன். இதற்காக நீ எனக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என்று சொன்ன ஸ்ரீனிவாச அய்யங்கார், உன்னை போல் ஒரு திறமைசாலி, இந்த மாதிரி ஒரு கஷ்டத்தில் சிக்கி தவிக்கும்போது உதவி செய். அதுதான் நீ எனக்கு செய்யும் கைமாறு என்று கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் திறமைசாலியான கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு எஸ்.எஸ்.வாசன் உதவி செய்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...