ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வழங்கப்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டி என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் முன் வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
சென்னை போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட்டுக்களை ஆன்லைனில் புக் செய்ய இன்று ரசிகர்கள் முயற்சி செய்தபோது பத்தே நிமிடங்களில் ஆன்லைனுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவுண்டர்களில் வழங்கினால் தான் டிக்கெட்டுகளை பதுக்க முடியும் என்றும் அதிக டிக்கெட்டுகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் விற்க முடியும் என்பதால் தான் இவ்வாறு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே அடுத்த போட்டியிலிருந்து அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் தேவையானவர்கள் எத்தனை டிக்கெட்டுகளை வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம் என்ற வழிமுறையை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.