செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடைய

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கு புகழ்பெற்ற ஸ்தலம்.இங்குள்ள சிவன் கோவிலில் அங்காரகன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அதனால் நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்க வருவோர், இங்குள்ள செவ்வாயை தரிசித்து பரிகாரம் செய்ய இங்கு வருவர்.

a5b7031b8b5ba89f763566ac7c396b7b-3

உண்மையில் மனதுக்கு ஆத்மார்த்தமான ஸ்தலம் இது. செவ்வாய் நெருப்பு போல ரணமான கிரகம். செவ்வாயின் ஆதிக்கம் உள்ள மேஷ ராசிக்காரர்கள்,விருச்சிகராசிக்காரர்களுக்கு இந்த வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

இந்த மேஷ ராசிக்காரர்கள், விருச்சிகராசிக்காரர்களை போல கோபக்காரர்களை பார்க்கவே முடியாது.மற்ற ராசிக்காரர்களை விட இவர்களுக்கு ஒரு மடங்கு கூடுதலாகவே கோபம் வரும்.

செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்ற வீடுகள் இந்த ராசிக்காரர்கள். வருடம் ஒரு முறையாவது இந்த கோவில் சென்று இந்த ராசிக்காரர்கள் வழிபட்டு வருவது வாழ்க்கையில் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

மேலும் செவ்வாய்தோஷ ரீதியாக பிரச்சினைகள் உள்ள அனைவருமே தங்கள் நட்சத்திர நாளன்று இங்கு வந்து முதலில் மூலவரான வைத்திஸ்வரர், தையல்நாயகி அம்பாளை வணங்கி விட்டு செவ்வாயை வணங்கி ஒருஅர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இங்கு முத்துக்குமாரசுவாமியாக வீற்றிருக்கிறார் அவரையும் வணங்குவது சிறப்பு.

மேலும் நோய் நொடிகள் உள்ளவர்கள் இங்குள்ள நோய்தீர்த்த வைத்தீஸ்வரருக்கு அபிசேகம் செய்த சாந்துருண்டை என்ற மருந்து பொருள் தருவார்கள் அதையும் வாங்கி உட்கொள்வது நோய்களில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews