சென்டிமென்ட்டாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

2 நாட்களுக்கு முன்னதாக முகினின் தாயாரும், தங்கையும் வந்து சென்றனர், முகினின் தங்கை பேபி சாண்டியை பார்க்க வேண்டும் என்று கூற, அனைவரும் கிண்டர் கார்டன்போல் செய்து காட்டி அனைவரையும் கலகலப்பாக்கினார்.


அதன்பின்னர் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வந்தனர். லோஸ்லியா- கவின் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பம் மனம் நொந்து இருந்தது.

நேற்று காலை தர்சனின் தாயார் ஷியாமலா மற்றும் தங்கை துஷாரா ஆகியோர் வந்தனர், ஷியாமலாவின் பிறந்த நாளுக்கு பிக் பாஸ் கேக் அனுப்ப, அதனை வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதன்பின்னர் மதியம் வனிதாவின் இரு மகள்களும் உள்ளே வந்தனர். குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும்? அனைவரும் ஆடிப் பாடி, ஓடி விளையாடி குழந்தைகளோடு குழந்தைகள் ஆகிவிட்டனர்.

நேற்று மாலை, “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” பாடல் ஒளிபரப்பாக,  சேரனின், தாயார், தங்கை மற்றும் இளைய மகள் தாமினி ஆகியோர் வந்தனர், சேரன் ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொண்டார். அதன்பின்னர் அனைவரிடமும் பேசினர்.

மீதமிருப்பது கவின், சாண்டி, ஷெரின் ஆகியோரின் குடும்பம் வருகைதான்,  அவர்களும் அதை நோக்கி ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர்.

Published by
Staff

Recent Posts