மிரட்ட தயாராகும் பிபர்ஜாய் புயல்!.. மக்களுக்கு எச்சரிக்கை!..

இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான முதல் புயல் தான் பிபர்ஜாய் புயல். புயல் காரணமாக தென்மேற்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது.

தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் பிபர்ஜாய் புயல் தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புயல் மும்பைக்கு 600 கிலோ மீட்டர் மேற்கிலும் பாகிஸ்தானின் கராச்சிக்கு 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 15ஆம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய குஜராத்தி, சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம்,திருச்சூர், மலப்புறம் மற்றும் கோழிக்கோடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் ஜூன் 14, 15ஆம் தேதிகளில் தெற்கு மற்றும் மேற்கு ராஜஸ்தானில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு கடல் அலைகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. கர்நாடக கடற்கரைப் பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாலுடன் இதை மட்டும் கலந்து குடிக்கவே கூடாது!! ஏன் தெரியுமா?

இந்த புயல் காரணமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கொட்டி தீர்த்து வரும் கனமழைக்கு 30க்கும் மேற்பட்டு ஒரு உயிரிழந்த நிலையில் 1045 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews