திருச்செந்தூர் வடிவேலன் கோவிலில் நடிகர் வடிவேல்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர்.

d596e9e65d945e055415c0ad9bfe665d

ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து கேட்டனர். அவர் பேசிய பேச்சு குறித்தும் கேட்டனர். என்ன பேசினார் என நிருபர்களை பார்த்து திரும்ப கேட்ட வடிவேலிடம் கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என கூறுகிறார் என நிருபர்கள் கூறினர்.

நல்லாதானே சொல்லிருக்காரு என வடிவேல் குறிப்பிட்டார். 2001ல நான் தான் முதலமைச்சர் என முதலில் குறிப்பிட்டார் பின்பு தவறை திருத்தி 2021ல் நான் தான் முதலமைச்சர் என ஜாலியாக குறிப்பிட்டார்.

ஊர் மக்கள் நாடு வீடு, ஊர் செழிக்க எல்லாரும் நல்லா இருக்கவும் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக வடிவேல் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews