ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த ஷூவை அணிந்து நடந்தால் மின்சாரம் கிடைக்கும் என்று அந்த மின்சாரத்திலிருந்து மொபைல் சார்ஜிங் உள்பட பல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் சௌபிக் ஷேக். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தனது மாமாவின் எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்துள்ளார் என்பதும் அப்போது எலக்ட்ரானிக் மீது அவருக்கு ஆர்வம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு இந்த ஸ்மார்ட் ஷூ அமைப்பு வெளிப்புறமாக செய்யப்படுகிறது என்றும் ஒரு சில நாட்களுக்குள் அனைத்து கேட்ஜெட்டுகளும் அடிப்பகுதியில் கட்டமைக்கப்படும் என்றும் மாணவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’இந்த ஸ்மார்ட் ஷூவை நான் தூக்கி எறியப்பட்ட சில பொருள்களில் இருந்து செய்தேன் என்றும் இந்த காலணியில் குழந்தைகளுக்கு மிகவும் வசதியான ஜிபிஎஸ் அமைப்பும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஷூவில் ஸ்பை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் சந்தேகத்திற்கு இடமான நபர் யாராவது குழந்தையை அணுகினால் அல்லது தவறான நோக்கத்தில் நெருங்கி வந்தால் நாம் கண்டுபிடித்து உடனடியாக சுகாரித்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்
இந்த ஷூவின் தயாரிப்பு தற்போது ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்றும் ஷூ நிறுவனம் நிதி உதவி செய்தால் இன்னும் பெரிய அளவில் இதை விரிவுபடுத்தி பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்து தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.