செய்திகள்

2028 முதல் நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்.. குமரி முதல் காஷ்மீர் வரை.. ஒவ்வொரு சனி, ஞாயிறும் இனி தேர்தல் பிரச்சாரம் தான்.. ஒரு மாநிலத்திற்கு 4 நாட்கள்.. ஒரே வருடத்தில் நாடு முழுவதும் கவர் செய்ய முடிவு..

2028 முதல் நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்.. குமரி முதல் காஷ்மீர் வரை.. ஒவ்வொரு சனி, ஞாயிறும் இனி தேர்தல் பிரச்சாரம் தான்.. ஒரு மாநிலத்திற்கு 4 நாட்கள்.. ஒரே வருடத்தில் நாடு முழுவதும் கவர் செய்ய முடிவு.. வெறும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், பேரணிகள் மட்டுமல்ல.. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை சந்தித்து நேரில் உரையாடவும் திட்டம்.. ஏதோ பெரிய திட்டம்…

2028ஆம் ஆண்டிலிருந்தே விஜய் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் விஜயால் தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என்ற பேச்சு இருந்தது. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தேர்தல் பணிச்சுமைகள் காரணமாக அவரது பிரசாரம் குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது தேசிய அரசியலை நோக்கி விஜயின் பார்வை திரும்பியிருப்பதாக வெளியாகும் தகவல்கள், அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

2029ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே நாடு முழுவதும் தனது அரசியல் பயணத்தை தொடங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தை தாண்டி தேசிய அளவில் மக்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்துவது, பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலை புரிந்துகொள்வது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்துகொள்வது ஆகியவை இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்கள் வரை தனது அரசியல் களத்தை விரிவுபடுத்துவதற்கான ஆரம்ப கட்ட முயற்சியாக இந்த சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது.

தென் இந்தியாவில் தொடங்கி வட இந்தியாவின் எல்லையான காஷ்மீர் வரை விஜய் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படும் தகவல்தான் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெறும் பொதுக்கூட்டம் நடத்திவிட்டு திரும்புவது மட்டுமல்லாமல், அந்த மாநில மக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவது, உள்ளூர் பிரச்சினைகளை தெரிந்துகொள்வது, இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உருவான தனது அரசியல் அடையாளத்தை தேசிய அளவிலும் கொண்டு செல்ல விஜய் முயற்சி செய்யலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்காக ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளையும் தொடர்ந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மாநிலத்திற்கு சுமார் நான்கு நாட்கள் என்ற அடிப்படையில் பயண அட்டவணை தயாரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அப்படி திட்டமிட்டால், ஒரே ஆண்டுக்குள் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு சென்று மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற நீண்டகால திட்டமிடப்பட்ட அரசியல் பயணம் விஜயின் தேசிய அரசியல் அறிமுகத்தை வலுப்படுத்துவதோடு, தமிழகத்திற்கு வெளியேயும் அவரது ஆதரவு தளத்தை உருவாக்க உதவக்கூடும்.

குறிப்பாக திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே பல மாநிலங்களில் அறிமுகமான முகமாக விஜய் இருப்பது அவருக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தரக்கூடிய அம்சமாக இருக்கலாம். ஆனால் சினிமா புகழை மட்டும் வைத்து தேசிய அரசியலில் நிலையான ஆதரவை உருவாக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. அவற்றை புரிந்துகொண்டு அதற்கேற்ற அரசியல் அணுகுமுறையை உருவாக்குவதுதான் விஜயின் உண்மையான சவாலாக இருக்கும். அதனால் இந்த சுற்றுப்பயணம் வெறும் தேர்தல் பிரசாரமாக இல்லாமல், ஒரு நீண்டகால அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாக இருந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும் நிலையில், 2028 முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது விஜய்க்கு தனது அரசியல் நோக்கங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல போதுமான நேரத்தை வழங்கும். தமிழகத்தை தாண்டி தேசிய அளவில் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது அதற்கான முக்கியமான முதல் படியாக அமையும். தெற்கிலிருந்து வடக்குவரை, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் என விஜயின் அரசியல் பயணம் உண்மையில் தொடங்கினால், அது தமிழக அரசியலை மட்டுமல்லாமல் தேசிய அரசியல் களத்திலும் புதிய விவாதத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.