தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த உத்தேச திருப்பங்கள் மற்றும் திமுக தலைமை எதிர்கொள்ளும் சட்டரீதியான நெருக்கடிகள், குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை, மாநிலத்தின் அரசியல் களத்தில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது. தமிழக அரசியலின் மையம் ‘விஜய் vs ஸ்டாலின்’ என்ற நேர்கோட்டில் பயணித்து வந்த நிலையில், தற்போதைய சூழல் ‘விஜய் vs உதயநிதி’ என்ற நேரடி மோதலாக மாறியிருக்கிறது. உண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்த்த அரசியல் களம் இதுதான் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்டாலின் அவர்கள் தற்போதைய சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகக்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளதால், எதிர்க்கட்சியான திமுகவின் முதன்மை முகமாக உதயநிதி ஸ்டாலினே களம் இறக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, வரவிருக்கும் அரசியல் போரில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான பிரதான சவாலாக உதயநிதியே உருவெடுத்துள்ளார். ஆனால், இந்த நேரடி மோதல் எதிர்க்கட்சிக்குச் சாதகமாக அமைவதற்குப் பதிலாக, தவெகவின் அரசியல் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவே மாறியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் விஜய் காட்டி வரும் அரசியல் முதிர்ச்சியும், நிர்வாகத்தில் அவர் கடைப்பிடிக்கும் நேர்மையும் மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது. எந்தவொரு உணர்ச்சிவசப்படலுக்கும் இடம் தராமல், சட்டத்தின் ஆட்சியையும் நிதி நிர்வாகத்தையும் மிகத் துல்லியமாக நடத்திச் செல்லும் விஜய்யின் தலைமைப் பண்பு, தமிழக வாக்காளர்களிடையே ஒரு நம்பிக்கையான தலைவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது. தனது ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டு, கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் விஜய்யின் அப்ரோச், தவெக அரசை மக்கள் மத்தியில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் அரசியல் பிரசாரங்களும், அவர் பயன்படுத்தி வரும் எல்லை மீறிய காரசாரமான வார்த்தைகளும் பொதுமக்களிடையேயும் நடுநிலையாளர்களிடையேயும் கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளன. அரசியல் கண்ணியத்தைத் தாண்டி, நாகரிகமற்ற முறையில் பேசப்படும் பேச்சுக்கள் எதிர்க்கட்சியின் பிம்பத்தை மேலும் சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளன. விஜய்யின் நிதானமான நிர்வாகப் பாணிக்கும், உதயநிதியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களுக்கும் இடையே உள்ள இந்தத் தெளிவான வேறுபாடு, மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் வைக்கவில்லை.
இந்த இருவேறு அரசியல் அணுகுமுறைகளை ஒப்பீடு செய்து பார்க்கும் மூத்த அரசியல் விமர்சகர்கள், இந்த மோதலை கிரிக்கெட் உலகின் ‘இந்தியா vs ஜிம்பாப்வே’ போட்டிக்கு இணையானது என்று வர்ணிக்கின்றனர். ஒரு வலுவான அணிக்கும், தடுமாறும் அணிக்கும் இடையிலான போட்டியில் முடிவு எவ்வாறு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுமோ, அதேபோல்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலும் அமைந்துள்ளது. டாஸ் போட்டவுடனேயே விளையாடத் தேவையில்லாமல் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடம் கொடுத்துவிடலாம் என்ற அளவிற்கே தவெகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் எத்தனை சலசலப்புகளை உருவாக்க முயன்றாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் செல்வாக்கையும் முதல்வர் விஜய்யின் தொலைநோக்கு தலைமையையும் எதிர்கொள்ள முடிாமல் திணறி வருகின்றன. ‘விஜய் vs உதயநிதி’ என்ற இந்த புதிய டிரெண்ட், தவெக அரசுக்கான ஆதரவை மேலும் பலமடங்கு உயர்த்தியுள்ளதுடன், தமிழக அரசியல் வரலாற்றில் தவெகவின் ஆட்சியை மேலும் பலமான அடித்தளத்தில் அமர்த்தியுள்ளது என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
