மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..

பொதுவாகவே வெள்ளிக் கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் மாசி மாத வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்தது. அதனால் எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும் நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க.

அதனால் நம்மை விட்டு அதிர்ஷ்டமும் செல்வமும் விலகி போக ஆரம்பித்து விடும். மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும் நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால் லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.

clean house
clean house

அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. அதனால் இதை மட்டும் கண்டிப்பாக செய்துவிடாதீர்கள். அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால் அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம்.

எவ்வளவோ சம்பாதித்தாலும் பொருள், வீடு வந்து சேரல… நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைப் பார்க்கலாம். அது ஏன்னு பார்த்தால் இதனால் தான் இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. முடிந்தவரை வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

loan
loan

நம்மில் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் தான் அவசரம் என்று தலையை சொரிந்து கொண்டு  கடன் கேட்பாங்க. அது 10 ரூபாயோ 100 ரூபாயோ  கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.

அதே போல் வெள்ளிக் கிழமைகளில் அரிசியை வறுப்பதும் புடைப்பதும் கூடாது.  குறிப்பாக, பச்சரிசியை வெள்ளிக்கிழமைகளில் அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். பச்சரிசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
அப்புறம் எல்லா கிழமைகளிலுமே பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல் கடன் கொடுத்தல் இரண்டுமே கூடாது.

free hair
free hair

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு வைத்த பிறகு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு தலை வாருதல், பேன் பார்த்தல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. பெரும்பாலும், பெண்கள் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு குளித்து விட்டு தலை காய வைக்க நேரம் ஒதுக்கி விட்டு பின்னர் வேறு வேலையில் ஈடுபடுங்கள். தலை முடியை வெள்ளிக் கிழமைகளில் தலைவிரி கோலமாய் போட்டு இருக்கக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு குப்பை கூளங்களை வெளியே வீசக் கூடாது.
காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கேற்றக் கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி வெட்டக் கூடாது.
பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைபிடிக்கலாம்.

துண்டைக் கட்டிக் கொண்டோ துண்டை தோளில் போட்டுக் கொண்டோ… ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது. தேங்காயை பூஜைக்கு படைக்கும் போது உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால் அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது.

இயற்கை பூக்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பூக்களையும் மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews