கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜெண்டினா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 நாடுகள் தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய இரண்டு நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதேபோல் போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் போர்ச்சுகல் அணி மிக அபாரமாக விளையாடி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு இறுதியில் மோதும் அணிகள் பின்வருவன:
குரோஷியா – பிரேசில்
மொரோக்கோ – போர்ச்சுக்கல்
நெதர்லாந்து – அர்ஜெண்டினா
இங்கிலாந்து – பிரான்ஸ்