தெய்வ வழிபாட்டில் ஏன் 108க்கு முக்கியத்துவம்


மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. “மாயை உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம் இந்த  வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு.
 

மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் 1க்கும் எட்டுக்கும் மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி அதிகமாகவே கைகொடுக்கிறது.

அதனால் 108 முறை மந்திரம் சொல்லுதலும் சாமியை சுற்றி வருதலும் இன்னும் பல விசயங்களுக்கு மந்திரங்கள் கை கொடுக்கிறது.

Published by
Staff

Recent Posts