விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நடிகர் விஜய் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் தவித்து கொண்டிருக்க மறுபக்கம் தளபதி விஜய்யின் திடீர் ஆலோசனைகளால் தமிழக அரசியல் தளத்தில் சலனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தலைவா படத் தலைப்பில் இடம் பெற்ற TIME TO LEAD என்ற வாசகத்திற்கான நேரம் வந்துவிட்டதோ என்று எண்ணம் தோன்றுகிறது.

இத்தனை நாட்களாக மக்கள் இயக்கத்தின் மூலம் பதுங்கி பதுங்கி வேலைகளை பார்த்த அவரது ரசிகர்கள் சமீப காலமாக வெளிப்படையாகவே வேலைகளை தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் சான்றுதல் மற்றும் அறுசுவை விருந்தும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியானது.

அதன் தொடர்ச்சியாக இரண்டு கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட போவதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. காவலன் பட வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் நொந்து நூலான விஜயின் மனதில் அன்றே அரசியல் தீ பற்றி கொண்டது.

அதே ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கே என் ஆதரவு என கரம் நீட்டினார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு நாங்கள் அணிலை போல் உதவினோம் என்ற விஜய்யின் வார்த்தைகள் பொதுத்தளத்தில் விவாதங்களை கிளப்பியது. அவரது அரசியல் வாழ்க்கைக்கும் தூபம் போட்டது.

அவரின் துப்பாக்கி திரைப்படம் வெளியான நேரத்தில் சிறுபான்மையினர் எதிர்ப்பு பலமாக இருந்தது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டியை வெளிப்படையாக எதிர்த்தார். தலைவா படத்தில் அவர் சந்தித்த நெருக்கடிகள் அவரின் அரசியல் எண்ணத்தை வலுப்படுத்தியது.

சர்க்கார் படத்தில் என் தலைவன் முகம் எங்க பிராண்ட் என்ற வசனத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட கட்சியை வெளிப்படையாகவே சீண்டினார். அதே படத்தில் தமிழகத்தில் வழங்கப்பட்ட இலவச நலத்திட்ட பொருட்களை தூக்கி எறிந்து அரசியல் பேசினார். இப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் தமிழக அரசியலை நோக்கி கல் எரிய தொடங்கிய விஜய் தன் மக்கள் இயக்கத்தை வைத்து இலவச பொருட்கள் அன்னதானம் என தமிழகத்தின் அரசியலுக்கு தகுதி என அழைக்கப்படக்கூடிய அனைத்தையும் முன்னெடுத்தார்.

இளைஞர்களையும் மாணவர்களையும் நோக்கி காய்களை நகர்த்தும் விஜய், முதல் தலைமுறை வாக்காளர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. திரை துறையில் இருந்து வந்த எம் ஜி ஆர் ஐ கொண்டாடிய மக்கள் அதே துறை துறையில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் பாக்யராஜுக்கும் வரவேற்பு அளிக்கவில்லை.

நீ டைரக்டரா? நான் டைரக்டரா? இயக்குனரை கடுப்பேத்திய வடிவேலு – விஜய் படத்தில் நடந்த சலசலப்பு!

கருணாநிதியும் ஜெயலலிதாவும் குருபலத்தோடு அரசியல் செய்து கொண்டிருந்தபோது இருவரையும் எதிர்த்து அதிரடி அரசியலில் இறங்கிய விஜயகாந்த் மக்கள் பேராதரவு அளித்தனர். அரசியலுக்கு வருவேன் எனக் கூறி பின்னர் பின்வாங்கிய ரஜினிக்கு மத்தியில் திடீரென அரசியல் களம் கண்ட கமல்ஹாசனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த வரிசையில் அரசியலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரப் போவதாக கூறி களம் கண்ட பலரும் தடுமாறி நிற்க புதிதாய் கிளம்பி இருக்கும் விஜய் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews