தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை… பாறை வடிவில் சுயம்பு லிங்கம்..!

கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளியங்கிரி மலை தான். இங்கு சுயம்புலிங்கமாக சிவன் வீற்றிருக்கிறார். பக்தர்கள் ஒரு அழகிய மலைப்பயணம் சென்று இறைவைனத் தரிசித்து வருகின்றனர். இங்கு சிவன் வந்தது எப்படி? நாம் செல்வது எப்படி என்று பார்க்கலாமா…

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் உள்ளது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிலோ மீட்டர் மலைப்பயண தூரத்தில் உள்ளது. இந்த மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையில் அமைந்திருக்கும் கைலாய மலை.

வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலை. மேகங்கள் சூழ்ந்திருப்பது போல காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறித்தான் செல்ல வேண்டும். 7 மலை கடந்து உச்சிக்குச் சென்றால், இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்பு லிங்கமாக பாறை வடிவில் காட்சியளிக்கிறார். அழகிய மலையில் அற்புதமாக வீற்றிருக்கும் சிவனுக்கு பூஜைகள் சற்று வித்தியாசமாக நடக்கிறது.

ஒரு பெண் மணந்தால் சிவனைத்தான் மணப்பேன். அதிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். ஒருவேளை அப்படி மணக்க முடியாமல் போனால் என் உயிரையும் துறந்து விடுவேன் என்கிறாள். அவளது பக்தியைக் கண்ட சிவன் அவளை நோக்கி வருகிறார். ஆனால், அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேர அவர் அங்கு வர தாமதமாகிறது.

இந்த நிலையில் அந்த பெண், குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால் நின்ற கோலத்தில் அவள் தன் உயிரைத் துறக்கிறாள். அவளுக்கு இன்றும் கன்னியாகுமரியில் கோவில் உள்ளது. இதனால் சிவன் தன் பக்தியைக் காப்பாற்ற முடியாமல் மனச்சோர்வு அடைகிறார். தொடர்ந்து தன் கவலைகளைக் குறைக்க வெள்ளியங்கிரி மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார்.

சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையின் 3 பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களிலும் சென்று வழிபட முடியும்.

South Kailash
South Kailash

ஆனால் வெள்ளியங்கிரி மலைக்கு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் தான் செல்ல முடியும். இந்த மாதங்களுக்குப் பிறகு தென்மேற்குப் பருவ மழை பெய்யத் துவங்கி விடுவதால் மலைப் பாதைகள் மழைநீர் செல்லும் வழித்தடங்களாக மாறி விடுகின்றன.

மேலும் கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்று விடுவதால் அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. குறிப்பாக சித்ரா பௌர்ணமியின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.

கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலையில் மின் வசதிகள் கிடையாது. சபரிமலை போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. 12 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மலையில் ஏற அனுமதி இல்லை. அதே நேரம் பெண்கள் செல்லக் கூடாது என்று தடுப்பதும் இல்லை. ஆனாலும் பக்தர்கள் காலம் காலமாக இந்த கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து வருகின்றனர்.

மீறி மலை ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாக நம் முன்னோர்கள் சொல்கின்றனர். இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு செல்பவர்கள், கைலாய யாத்திரைக்குச் செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி செல்வார்கள். அதற்கு அடுத்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி மலை ஏறுகின்றனர்.

வெள்ளி விநாயகர் கோவில் மலை, பாம்பாட்டி சுனை, வழுக்குப் பாறை, கைதட்டி சுனை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை என 6 மலைகளை தாண்டி 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். வெள்ளியங்கிரி மலைப் பயணம் இறைவனை இயற்கையுடன் தரிசிக்க ஒரு அருமையான வாய்ப்பு.அதுமட்டும் அல்லாமல் இந்தப் பயணம் ஒரு மலையேற்றப் பயிற்சியாகவும் உள்ளது.

கோவை ஈஷா யோக மையத்தில் ஆதிசிவன் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறார். இந்த மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வருகிறார். இதுவும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில்; தான் உள்ளது. கோவைக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வரும் சிவராத்திரி அன்று இங்கு உலகம் முழுவதும் இருந்து கலந்து கொள்வர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews