வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நைவேத்தியமாய் இந்த அவல் கேசரியை படைப்போம்!!

ரவை, சேமியாவில் கேசரி கிளறி சாப்பிட்டிருப்போம். புதுவிதமாய் அவல் கேசரி செய்வது எப்படியென பார்க்கலாம். இந்த அவல் கேசரியை நவராத்திரி தினங்களில் எதாவது ஒரு நாளில் அம்மனுக்கு படைப்பது வழக்கம்

939a60e780b343ee63409369a027926d

தேவையானப்பொருட்கள்:

அவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – சிறிது
உலர்ந்த திராட்சை – சிறிது
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு வாணலியில் அவலைப் போட்டு, வாசனை வரும்வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், பொடி செய்து வைத்திருக்கும் அவலை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.  மிதமான தீயில், அவல் வெந்து தண்ணீர் சுண்டும்வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.  கேசரி பவுடரையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.  கடைசியில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக்கியோ அல்லது, கிண்ணத்திலோ மாற்றி அம்மனுக்கு நைவேத்தியமாக்கி அனைவருக்கும் கொடுக்கவும்..

சிகப்பு அவலிலும் கேசரி செய்யலாம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews