வீட்டில் பிரெட் மீதமிருக்கா?! அப்ப அதில் அல்வா செஞ்சிடுங்க..

காய்ச்சலின்போது பிரெட் வாங்கி வருவோம், ஓரிரு பிரெட் துண்டுகளை சாப்பிட்டு மிச்ச பிரெட் காய்ஞ்சு பூசனம் பூத்து தூக்கிபோட்டுடுவோம் இனி அப்படி தூக்கி போடவேண்டாம். பிரெட்டில் சுவையான அல்வாவை 20நிமிசத்துல அதுவும் சுலபாய் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்திடலாம்.

462df98371e77b8b198af824362edaa4

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 10சர்க்கரை – 2 கப்முந்திரி – 20பாதாம் – 10உலர்ந்த திராட்சை – 10நெய் – 1 கப்பால் – 500 லிட்டர்டால்டா – 2 டீஸ்பூன்

செய்முறை: பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாலை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறி பிரெட் துண்டுகள் சேர்த்து வேக விடவும். பிரெட் துண்டுகள் சற்று வெந்தவுடன் அதில் நெய் மற்றும் டால்டா சேர்த்து அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, துறுவிய பாதாம் சேர்த்து கிளறி  விடவும். சுவையான பிரெட் அல்வா தயார். 

குறிப்பு: இதில் தேவைப்பட்டால் கன்டன்ஸ்ட் மில்க் சேர்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews