விளையாட்டு

கொல்கத்தாவின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் டெல்லியின் முன்னாள் கேப்டன்……!

கடந்த சனி மற்றும் ஞாயிறு தினத்தன்று பெங்களூருவில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகள் கலந்து கொண்டிருந்தன.

இதில் பலரும் எதிர்பாராதவிதமாக ஏலம் அமைந்தது. ஏனென்றால் ஒவ்வொரு அணியின் நட்சத்திர வீரர்கள் வேறு அணிக்கு ஏலத்தில் விற்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணி வீரருமான ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் விடப்பட்டார்.

அப்போது அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இந்த நிலையில் அவரை வாங்கியதோடு மட்டுமில்லாமல் அவரையே கொல்கத்தாவின் புதிய கேப்டனாக நியமித்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த இயான் மோர்கன் மாற்றப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஏலத்தில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Vetri P

Recent Posts