10 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 56 வயதில் மாரடைப்பால் மரணம்.. நல்லெண்ணெய் சித்ராவின் சினிமா வாழ்க்கை..!

10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 56வது வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நல்லெண்ணெய் சித்ராவின் சினிமா வாழ்க்கையை தான் தற்போது பார்க்க போகிறோம்.

கேரளாவில் உள்ள கொச்சியை சேர்ந்தவர் சித்ரா. இவர் சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார். இதனை அடுத்து அவர் தனது 10வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் சின்ன கேரக்டரில் நடித்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

அதன் பிறகு அவர் பல மலையாள திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினியின் லெட்டரை ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கும் சிறுமி வேடத்தில் நடித்திருந்தார்.

Nallennai Chithra

இந்த நிலையில் ரசிகன் ஒரு ரசிகை என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் சுகாசினி கணவரின் இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்த காட்சிகளில் அவர் உருக்கமாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் தான் அவர் நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்தார். அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனதால் அவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது. இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

தமிழில் ஒருசில படங்கள் தான்.. அதன்பின் தமிழக அமைச்சரின் மருமகள் ஆன நடிகை..!

குறிப்பாக ரஜினிகாந்த் உடன் சித்ரா நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக அசத்தலாக நடித்திருப்பார் என்பதும், இவரது கேரக்டர் தான் படத்தின் மையப்புள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த மனோபாலா இயக்கியிருந்தார்.

அதே போல் பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’, ராம்கி நடித்த ’வெள்ளைய தேவன்’ ஆகிய படங்களில் நடித்த சித்ரா, ‘சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார். இதனை அடுத்து அவர் பல படங்களில் குணசேத்திர வேடங்களில் கலக்கியிருந்தார்.

Nallennai Chithra1

நடிகை சித்ரா கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…! நடிகை ஜெயப்பிரதாவின் உன்னத நடிப்புக்கு இந்த ஒரு படமே போதும்…!

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சித்ராவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews