ரஜினி-பெரியார் விவகாரம்: முடித்து வைத்த சூர்யா ரசிகர்கள்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்தும் முரசொலி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர். ரஜினியை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்யாத அரசியல்வாதியே இல்லை என்ற அளவுக்கு சமூக வலைதளமே பரபரப்பில் உள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா ரசிகர்கள் ரஜினி-பெரியாறு விவகாரம் குறித்து ட்ரெண்டை பின்னுக்கு தள்ளினார்கள். சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் ’மாறாதீம்’ என்ற பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது

இதனை அடுத்து இதுவரை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த ரஜினி-பெரியாறு விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சூர்யாவின் ’மாறாதீம்’ என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது இதனை அடுத்து ரஜினி பெரியாறு விவகாரத்தை சூர்யா ரசிகர்கள் முடித்து வைத்துவிட்டதாக சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Published by
Staff

Recent Posts