நான் செஞ்ச தப்புனாலதான் காயம் ஆச்சு.. சூர்யா விளக்கம்!!

வாடிவாசல் படப்பிடிப்பானது ஜூன் 2 வது வாரம் துவங்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. இது வதந்தி என நம்பப்பட்ட நிலையில், சூர்யா அலுவலகத்தில் இருந்து இந்தத் தகவல் உறுதியானது.

பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் சமூக வலைதளங்கள் மூலம் லைவ் உரையாடலில் கலந்து கொண்ட சூர்யா- ஜோதிகா ஜோடியிடம் ரசிகர்கள் பலவிதமான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டு வந்தனர்.


அந்தவகையில் சூர்யாவிடம் காயம் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது, “வீட்டில் உடற்பயிற்சிகள் செய்தபோது,  டம்பெல்ஸைக் கொண்டு பயிற்சி முடித்ததும் அதே இடத்தில் வைக்காமல் கீழே வைத்துவிட்டேன், உடற்பயிற்சி செய்யும்  மும்முரத்தில் இருக்கும்போது அது கை விரலில் விழுந்துவிட்டது.

மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்க்கையில் சிறிய காயம்தான் சரியாகிவிடும் என்று கூறிவிட்டார்கள், மேலும் யாரும் உடற்பயிற்சி செய்யும்போது, இதுபோன்று கவனக் குறைவாக இராமல், பாதுகாப்பாக உடற்பயிற்சி உபகரணங்களைக் கையாளுங்கள்.

எடுத்த பொருளினை எடுத்த இடத்தில் உடனடியாக வைத்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை, தயவுகூர்ந்து நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts