Categories: ஜோதிடம்

கொரோனா ஒழிய யாகங்கள் செய்வதே சிறப்பு- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

சமீபத்தில் கொரோனா நோயால் வாழ்வாதாரம் இழந்த கோவில் குருக்கள் மற்றும் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் வரவேற்றுள்ளார்.

கோவில்களில் பணியாற்றுபவர்களுக்கு 4000 உதவித்தொகை வழங்குவதை வரவேற்கிறோம். அர்ச்சகர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு உதவி செய்பவர்கள் , கிராமக்கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் இந்த தொகையை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா ஒழிய வேண்டுமானால் அனைத்து கோவில்களிலும் ஒரே நேரத்தில் கடுமையான யாகங்கள் நடத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கூறியது போல அனைத்து இடத்திலும் ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை போல யாகங்களை ஒரே நேரத்தில் செய்தால்தான் நோய்த்தாக்கம் குறையும். ஏனென்றால் தனி நபர் ப்ரார்த்தனையை விட கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகமாகும்

Published by
Staff

Recent Posts