Sakthivel: அளவில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தும் சிக்கல் சிவபதி… சக்தியிடம் உண்மையை வாங்க துருவி துருவி கேள்விக் கேட்கும் ஜோதி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மெய்யநாதன் குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மறுபுறம் மீனாள் சக்தி கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை தீர விசாரிங்க என்று அவளது அம்மாவான ஜோதியை தூண்டி விடுகிறாள். இதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். சக்தி சொன்னதற்காக வேலு தனது அப்பாவிடம் உண்மை கூற முயற்சிக்கிறார். அப்போது அங்கு பக்கத்து வீட்டுப் பையன் விளையாட பந்து எடுக்க வந்தான். அவனை கூப்பிட்டு சிக்கல் சிவபதி என்னை தாத்தா என்று கூப்பிடு என்று கூப்பிடச் சொல்லி கேட்டு மகிழ்கிறார். அவனுக்கு காசு கொடுத்து தனது அளவில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் எதுவும் பேச முடியாமல் திரும்பி விடுகிறான் வேலு.

பின்னர் சக்தி வேலுவிடம் என்ன உண்மையை சொல்லிட்டியானு கேட்கிறாள். வேலு அங்கு நடந்ததை கூறுகிறான். சக்தி நீ மனுஷன் இல்லை, வேற ஒரு உலகத்துல இருக்க, நானே இந்த விஷயத்தை அத்தையிடம் சொல்வேன் என்று சொல்லிவிடுகிறாள். அப்படி செஞ்சா நீ பழைய வேலுவை பார்ப்ப என்று சொல்லி வேலு சக்தியை மிரட்டுகிறான்.

அடுத்ததாக சக்தி சமைத்து கொண்டிருக்கிறாள். அங்கு வந்த ஜோதி, நீயும் தேனுவும் ஒரே நேரத்துல முழுகாம ஆகிட்டீங்க இனி நான் தான் எல்லாருக்கும் சமைச்சு போடணும்னு சொல்கிறாள். அதற்கு சக்தி தேனு அக்காவால செய்ய முடியாது நான் வேலை செய்றேன்னு சொல்கிறாள். ஏன் அப்போ நீ முழுகாம இல்லையா, எனக்கு சந்தேகமா தான் இருக்கு, நீ எப்படி பட்ட ஆள்னு எனக்கு தெரியுமே, நீ நல்ல பெயர் மாமாகிட்ட எடுக்கிறதுக்காக தேனு முழுகாம இருந்த விஷயத்தை என்கிட்டே சொல்லாம நேரா மாமாகிட்ட சொல்லிட்ட. அதே மாதிரி உன் கர்ப்பத்துக்கு பின்னாடி ஏதும் ரகசியம் இருக்கானு கேட்கிறாள்.

சக்தி திணறுகிறான், அத்தை நான் ஆதாயத்துக்காக திட்டம் போட்டு எதுவும் செய்யமாட்டேன். அப்படி செய்றதுனால எனக்கு எதுவும் கிடைக்கப் போறது இல்லை என்னை நீங்க தப்பவே நினைக்கிறீங்க என்று சொல்கிறாள். அதற்கு ஜோதி, தேனுவை கூட நான் ஒரு வகையில சேர்த்துப்பேன் ஆனா உன்னை என்னால ஏத்துக்கவே முடியாது. டாக்டர் சீட்டு கேட்டா இல்லன்னா சொல்ற, இரு இப்போ அந்த டாக்டரே நம்ம வீட்டுக்கு வந்து மாமாகிட்ட எல்லா உண்மையும் சொல்வாங்க, உன் வேஷம் கலைய போகுதுனு சொல்லிட்டு சென்றுவிடுகிறாள்.

பின்னர் சக்தி வேலுவிடம் வந்து உன் நாடகம் முடிவுக்கு வரப்போகுது. அத்தை டாக்டரை வீட்டுக்கு வர சொல்லிட்டாங்க. டாக்டர் வந்து சொல்றதுக்கு முன்னாடி என்ன நடந்தாலும் பரவாயில்லை நீ போய் சொல்றியா இல்லை நான் சொல்லட்டுமா என்று கேட்கிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews