பழம்பெரும் நடிகர் சரத்பாபு சற்றுமுன் காலமானார் என்ற தகவல் உண்மையல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகர் சரத்பாபு இன்று காலமானார் என செய்தி வெளியான நிலையில் அவரது சகோதரி இந்த செய்தியை மறுத்துள்ளார்.
நடிகர் சரத் பாபு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தற்போது வேறு ஒரு அறைக்கு தான் மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் காலமாகவில்லை என்றும் அவரது சகோதரி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சரத்பாபு காலமானார் என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் உயிருடன் உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.